சனி, 5 ஜூன், 2010

திருநாவுக்கரசு சுவாமிகள் - தேவாரம் - தலமுறை - ( 006)


திருச்சிற்றம்பலம்
6. திருத்தில்லை

திருமுறை : 4 (81-வது பதிகம்) /  பண் : கொல்லி / திருவிருத்தம்

கருநட்ட கண்டனை அண்டத்தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதில் எய்ய வல்லானைச் செந்தீ முழங்கத்
திரு நட்டம் ஆடியைத் தில்லைக்கு இறையைச் சிற்றம்பலத்துப்
பெருநட்டம் ஆடியை வானவர்கோன் என்று வாழ்த்துவ்னே. (01)

ஒன்றி இருந்து நினைமின்கள் உம்தமக்கு ஊனம் இல்லைக் 
கன்றியக் காலனைக் காலால் கடிந்தான் அடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என்று வந்தாய் என்னும் எம்பெருமாந்தன் திருக்குறிப்பே. (02)

கல்மனவீர் கழியும் கருத்தே சொல்லிக் காண்பது என்னே
நல்மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
பொன்மலையில் வெள்ளிக்குன்றது போலப் பொலிந்து இலங்கி
என் மனமே ஒன்றிப் புக்கனன் போந்த சுவடு இல்லையே. (03) 

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமின் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்நீறும்
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மா நிலத்தே. (04)

வாய்த்தது நம்தமக்கு ஈது ஓர் பிறவி மதித்திடுமின் 
பார்த்தற்குப் பாசுபதம் அருள் செய்தவன் பத்தர் உள்ளீர்
கோத்து அன்று முப்புரம் தீ வளைத்தான் தில்லை அம்பலத்துக்
கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நம்தம் கூழைமையே. (05)

பூத்தன பொன்சடை பொன்போல் மிளிரப் புரிகணங்கள் 
ஆர்த்தன கொட்டி அரித்தன பல்குறள் பூதக்கணம்
தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்துக்
கூத்தனில் கூத்து வல்லார் உளரோ எந்தன் கோல்வளைக்கே. (06)

முடி கொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்கும் முறுவலிப்பும்
துடி கொண்ட கையும் துதைந்த வெண்நீறும் சுரிகுழலாள் 
படி கொண்ட பாகமும் பாய் புலித்தோலும் என் பாவிநெஞ்சில்
குடி கொண்டவா தில்லை அம்பலக் கூத்தன் குரைகழலே. (07)

படைக்கலமாக உன் நாமத்து எழுத்து அஞ்சும் என் நாவில் கொண்டேன்
இடைக்கல்ம் அல்லேன் எழுபிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் தூநீறு அணிந்து உன் 
அடைக்கலம் கண்டேய் அணிதில்லைச் சிற்றம்பலத்து அரனே. (08)

பொன் ஒத்த மேனை மேல் வெண்நீறு அணிந்து புரிசடைகள்
மின் ஒத்து இலங்கப் பலி தேர்ந்து உழலும் விடங்கர்வேடச்
சின்னத்தினால் மலி தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என் அத்தன் ஆடல் கண்டு இன்பு உற்றதால் இவ்விரு நிலமே. (09)

சாட எடுத்தது தக்கன் தன் வேள்வியில் சந்திரனை 
வீடஎடுத்தது காலனை நாரணன் நான்முகனும்
தேட எடுத்தது தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் 
ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ நம்மை ஆட்கொண்டதே. (10)

திருச்சிற்றம்பலம் 

ஞாயிறு, 9 மே, 2010

திருநாவுக்கரசு சுவாமிகள் - தேவாரம் - தலமுறை - ( 005)




திருச்சிற்றம்பலம் 

[5.] திருத்தில்லை


திருமுறை : 4 ( 80- வது பதிகம் )
பண் : கொல்லி
 திருவிருத்தம்

01   பாளையுடைக் கமுகு ஓங்கிப் பல்மாடம் நெருங்கி எங்கும்
       வாளையுடைப் புனல் வந்து ஏறி வாழ் வயல் தில்லைதன்னுள் 
       ஆளயுடைக் கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால் 
       பீளையுடைய கண்களால் ப்ன்னைப் பேய்த் தொண் காண்பது என்னே.
02   பொரு விடை ஒன்று உடைப் புண்ணிய மூர்த்தி புலிஅதளன்
       உருவுடை அம் மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம் 
       திருஉடை அந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்    
       திருவடியைக் கண்ட கண்கொண்டு மற்று இனிக்காண்பது என்னே.

03.   தொடுத்த மலரொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும் 
        அடுத்து வணங்கும் அயனொடு மாலுக்கும் காண்பு அரியான் 
        பொடிக் கொண்டு அணிந்து பொன்  ஆகிய தில்லைச் சிற்றம்பலவன்
         உடுத்த துகில் கண்ட கண்கொண்டு மற்று இனிக் காண்பது என்னே.

04    வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய
        அச்சம் ஒழிந்தேன் அணிதில்லை அம்பலத்து ஆடுகின்ற
        பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த 
        கச்சின் அழகு கண்டால் பின்னைக் கண் கொண்டு   காண்பது என்னே.

05    செய்ஞ் ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லைச்சிற்றம்பலவன்
        மைஞ் ஞின்ற ஒண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க
        நெய்ஞ் ஞின்ற எரியும் விளக்கு ஒத்த நீலமணிமிடற்றான்
         கெஞ் ஞின்ற ஆடல் கண்டால் பின்னைக் கண்கொண்டு காண்பது என்னே.

06   ஊனத்தை நீக்கி உலகு அறிய என்னை ஆட்கொண்டான் 
       தேன் ஒத்து எனக்கு இனியான் தில்லைச் சிற்றம்பலவன் என்கோன்
       வானத்தவர் உய்ய வன்நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும் 
       ஏனத்துஎயிறு கண்டால் பின்னைக் கண்கொண்டு மற்று இனிக் 
                                                                                                 காண்பது என்னே.

07    தெரிந்த கணையால் திரி புரம் மூன்றும் செந்தீயில் மூழ்க
        எரித்த இறைவன் இமையவர்கோன் இணை அடிகள் 
        தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்
        சிரித்த முகம் கண்ட கண்கொண்டு மற்று இனிக் 
                                                                                காண்பது என்னே.

08    சுற்றும் அமரர் சுரபதி திருப்பாதம் அல்லால்
        பற்று ஒன்று இலோம் என்று அழைப்பப் பரவையுள்
                                                                                   நஞ்சை உண்டான்
       செற்று அங்கு அநங்கனைத் தீவிழித்தான் தில்லை 
                                                                                              அம்பலவன்
        நெற்றியி கண் கண்ட கண்கொண்டு மற்று இனிக் 
                                                                                காண்பது என்னே.

09   சித்தத்து எழுந்த செழுங்  கமலத்து அன்ன சேவடிகள் 
        வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன் 
       முத்தும் வயிரமும் மாணிக்கம் தன்னுள் விளங்கிய தூ
        மத்தமலர் கண்ட கண்கொண்டு மற்று இனிக் 
                                                                                          காண்பது என்னே. 

10     தருக்கு மிகுத்துத் தன் தோள்வலி உன்னித் தடவரையை
         வரைக்கைகளால் எடுத்து ஆர்ப்ப மலைமகள்கோன் 
                                                                                                                   சிரித்து
         அரக்கன் மணி முடி பத்தும் அணி தில்லை அம்பலவன்
         நெருக்கி மிதித்த விரல் கண்ட கண்கொண்டு காண்பது 
                                                                                                              என்னே.

திருச்சிற்றம்பலம்           

   

செவ்வாய், 4 மே, 2010

திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம் - தலமுறை - (004)


04 - திருத்தில்லை

திருமுறை : 4 / (23-வது பதிகம்)

பண் : கொல்லி
திருநேரிசை

01.  பத்தனாய்ப் பாடமாடேன் பரமனே பரமயோகீ
       எத்தினால் பக்தி செய்கேன் என்னை நீ இகழவேண்டா
      முத்தனே முதல்வா தில்லை அம்பலத்து ஆடுகின்ற 
      அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறே.

02.   கருத்தனாய்ப் பாடமாட்டேன் காம்பன தோளி பங்கா
         ஒருத்தரால் அறிய ஒண்ணாத் திருஉரு உடைய சோதீ
         திருத்தமாம் தில்லைதன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
         நிருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்தவாறே.

03.   கேட்டிலேன்  கிளைபிரியேன் கேட்குமா கேட்டிஆகில்
        நாட்டினேன் நின்தன் பாதம் நடுப்பட நெஞ்சினுள்ளே         
        மாட்டில் நீர் வாளை பாயு மல்கு சிற்றம்பலத்தே
        கூட்டமாம் குவிமுலையாள் கூட நீ ஆடுமாறே.
04.   சிந்தையைத் திகைப்பியாதே செறிவு உடை அடிமை செய்ய
        எந்தைநீ அருளிச் செய்யாய் யாது நான் செய்வது என்னே
        செந்தியார் வேள்வி ஓவாத் தில்லைச் சிற்றம்பலத்தே 
        அந்தியும் பகலும்  ஆட அடிஇணை அலசும் கொல்லோ. 

05.   கண்டவா திரிந்து நாளும் கருத்தினால் நிந்தன் பாதம்
         கொண்டிருந்து ஆடிப்பாடிக் கூடுவன் குறிப்பினாலே
         வண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே
         எண்திசையோரும் ஏத்த இறைவ நீ ஆடுமாறே.

06.    பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன் பாடி ஆடி
         மூர்த்தியே என்பன் உன்னை மூவரில் முதல்வன் என்பன்
         ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் தில்லைச் சிற்றம்பலத்துக்
         கூத்தா உன் கூத்து காண்பாண் கூட நான் வந்தவாறே.

07.    பொய்யினைத் தவிர விட்டுப் புறம் அலா அடிமைசெய்ய 
          ஐய நீ அருளிச்செய்யாய் ஆதியே ஆதி மூர்த்தி 
          வையகம் தன்னில் மிக்க மல்கு சிற்றம்பலத்தே
          பைய நின் ஆடல் காண்பான் பரம நான் வந்தவாறே.

08.    மனத்தினார் திகைத்து நாளும் மாண்பு அலா நெறிகள்மேலே
          கனைப்பரால் என் செய்கேனோ கறை அணி கண்டத்தானே
          தினைத்தனை வேதம் குன்றாத் தில்லைச் சிற்றம்பலத்தே
         அனைத்தும் நின் இலயம் காண்பான் அடியனேன் வந்தவாறே.

09.     நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே 
           வஞ்சமே செய்தியாலோ வானவர்த் தலைவனே நீ
           மஞ்சு அடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே 
           அஞ் சொலாள் காண நின்று அழக நீ ஆடுமாறே.

10.      மண் உண்ட மாலவனும் மலர்மிசை மன்னினானும் 
            விண் உண்ட திருஉருவம் விரும்பினார் காணமாட்டார்
            திண்ணுண்ட திருவே மிக்க தில்லைச் சிற்றம்பலத்தே
           பண்ணுண்ட பாடலோடும் பரம நீ ஆடுமாறே.

திருச்சிற்றம்பலம்       

ஞாயிறு, 2 மே, 2010

திருநாவுக்கரசர் சுவாமிகள் தேவாரம் -தலமுறை - (002)


திருத்தில்லை

திருமுறை : 5 / (2-வது பதிகம்)
பண் : குறிஞ்சி
திருக்குறுந்தொகை

01 பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைதனைப் பொழுதும் மறந்து உய்வனோ.

02 தீர்த்தனைச் சிவனைச் சிவலோகனை
மூர்த்தியை முதலாய ஒருவனைப்
பார்த்தனுக்கு அருள்செய்த சிற்றம்பலக்
கூத்தனைக் கொடியேன் மறந்து உய்வனோ.

03 கட்டும் பாம்பும் கபாலம் கை மான் மறி
இட்டமாய் இடுகாட்டு எரி ஆடுவான்
சிட்டர் வாழ் தில்லை அம்பலக் கூத்தனை
எள்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ.

04 மாணி பால் கறந்து ஆட்டி வழிபட
நீண் உலகுஎலம் ஆளக் கொடுத்த என்
ஆணியைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற
தாணுவைத் தமியேன் மறந்து உய்வனோ.

05 பித்தனைப் பெருங்காடு அரங்கா உடை
முத்தனை முளை வெண்மதி சூடியைச்
சிந்தனைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ.

06 நீதியை நிறைவை மறைநான்கு உடன்
ஓதியை ஒருவர்க்கும் அறிவு ஒணாச்
சோதியைச் சுடர் செம்பொனின் அம்பலத்து
ஆதியை அடியேன் மறந்து உய்வனோ.

07 மைகொள் கண்டன் எண்தோளன் முக்கண்ணினன்
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனார்
செய்யமாது உறை சிற்றம்பலத்து எங்கள்
ஐயனை அடியேன் மறந்து உய்வனோ.

08 முழுதும் வான்உலகத்து உள தேவர்கள்
தொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால்
எழுதி மேய்ந்த சிற்றம்பலக் கூத்தனை
இழுதையேன் மறந்து எங்கனம் உய்வனோ.

09 கார் உலாம் மலர்க்கொன்றை அம்தாரனை
வார் உலாம் முலை மங்கை மணாளனைத்
தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை
ஆர்கிலா அமுதை மறந்து உய்வனோ.

10 ஓங்கு மால்வரை எந்தல் உற்றான் சிரம்
வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்
தேங்கு நீர் வயல் சூழ் தில்லைக் கூத்தனைப்
பங்கு இலாத் தொண்டனேன் மறந்து உய்வனோ.



திங்கள், 26 ஏப்ரல், 2010

திருநாவுக்கரசு சுவாமிகள் - தேவாரம் - தலமுறை ( 003)

3. திருத்தில்லை

திருமுறை : 4 / ( 22-வது பதிகம்)

பண் : கொல்லி
இராகம் : திரு நேரிசை




சென்சடைக்கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் சென்னி
நஞ்சு அடை கண்டனாரைக் காணல் ஆம் நறவம் நாறும்
மஞ்சு அடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே
துஞ்சு அடை இருள் கிழியத் துளங்கு எரிஆடுமாறே. (01)
ஏறனார் ஏறு தம்பால் இளநிலா எறிக்கும் சென்னி
ஆறனார் ஆறுசூடி ஆயிழையாள் ஓர்பாகம்
நாறு பூஞ்சோலைத் தில்லை நவின்ற சிற்றம்பலத்தே
நீறு மெய்பூசி நின்று நீண்டு எரி ஆடுமாறே. (02)
சடையனார் சாந்தநீற்றர் தனி நிலா எறிக்கும் சென்னி
உடையனார் உடைத்தலையில் உண்பதும் பிச்சை ஏற்றுக்
கடி கொள் பூந் தில்லைதன்னுள் கருது சிற்றம்பலத்தே
அடி கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடுமாறே. (03)

பைஅரவு அசைத்த அல்குல் பனிநிலா எறிக்கும் சென்னி
மையரிக்கண்ணியாளும் மாலும் ஓர் பாகம் ஆகிச்
செய்எரித் தில்லைதன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
கைஎரி வீசி நின்று கனல் எரி ஆடுமாறே. (04)

ஓதினார் வேதம் வாயால் ஒளி நிலா எறிக்கும் சென்னி
பூதனார் பூதம் சூழப் புலிஉரி அதளனார் தாம்
நாதனார் தில்லைதன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே
காதில் வெண்குழைகள் தாழக் கனல் எரி ஆடுமாறே. (05)

ஓர் உடம்பு இருவர் ஆகி ஒளிநிலா எறிக்கும் சென்னிப்
பாரிடம் பணிசெய்யப் பயின்ற எம் பரமமூர்த்தி
கார் இடம் தில்லைத் தன்னுள் கருது சிறம்பலத்தே
பேர் இடம் பெருக பிறங்கு எரி ஆடுமாறே. (06)

முதல் தனிச் சடையை மூழ்க முகில்நிலா எறிக்கும்சென்னி
மதக்களிற்று உரிவை போர்த்த மைந்தரைக் காணல் ஆகும்
மதத்து வண்டு அறையும் சோலை மல்கு சிற்றம்பலத்தே
கதத்தது ஓர் அரவம் ஆடக்கனல் எரி ஆடுமாறே. (07)

மறையனார் மழுஒன்று ஏத்தி மணிநிலா எறிக்கும் சென்னி
இறைவனார் எம்பிரானார் ஏத்துவார் இடர்கள்தீர்ப்பார்
சிறைகொள் நீர்த்தில்லை தன்னுள் திகழ்ந்த சிறம்ம்பலத்தே
அறைகழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடுமாறே. (08)

விருத்தனாய்ப் பாலனாகி விரிநிலா எறிக்கும் சென்னி
நிருத்தனார் நிருத்தம் செய்ய நீண்ட புன்சடைகள் தாழக்
கருத்தனார் தில்லைதன்னுள் கருது சிற்றம்பலத்தே
அருத்தமாமேனித் தன்னோடு அனல் எரி ஆடுமாறே. (09)

பாலனாய் விருத்தனாகி பனி நிலா எறிக்கும் சென்னிக்
காலனைக் காலால் காய்ந்த கடவுளார் விடை ஒன்று ஏறி
ஞாலம் ஆம் தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே
நீலம் சேர் கண்டனார் தாம் நீண்டு எரி ஆடுமாறே. (10)

மதி இலா அரக்கன் ஓடி மாமலை எடுக்க நோக்கி
நெதியன் தோள் நெறிய ஊன்றி நீடு இரும் பொழில்கள் சூழ்ந்த
மதியம் தோய் தில்லை தன்னுள் மல்கு சிற்றம்பலத்தே
அதிசயன் போல நின்று அனல் எரி ஆடுமாறே. (11)












































திங்கள், 19 ஏப்ரல், 2010

திருநாவுக்கரசர் சுவாமிகள் -தேவாரம் - தலமுறை (001)


1. திருத்தில்லை

திருமுறை : 5 / ( 1-வது பதிகம்)

திருக்குறுந்தொகை
பண் : குறிஞ்சி

இறைவன்: சபாநாயகர், / திருமூலநாதர்
இறைவி : சிவகாமியம்மை, / உமையம்மை

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என்னன்பு ஆலிக்குமாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே. 1

அரும்பு அற்றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
கரும்பு அற்றப் படத்தூவித் தொழுமினோ
கரும்பு அற்றச் சிலைக் காமைக் காய்ந்தவன்
பெரும்பற்றப் புலியூர் எம் பிரானையே. 2

அரிச்சுற்ற வினையால் அடர்ப்புண்டு நீர்
எரிச்சுற்றக் கிடந்தார் என்றயலவர்
சிரிச்சுற்றுப் பலபேசப் படாமுன்னம்
திருச்சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்மினே. 3
அல்லல் என்செய்யும் அருவினை என்செய்யும்
தொல்லை வல்வினைத் தொந்தம்தான் என்செய்யும்
தில்லைமா நகர்ச் சிற்றம்பல வனர்க்கு
எல்லை இல்லது ஓரடிமை பூண்டேனுக்கே. 4

ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான் நிலாவி இருப்பன் என்நாதனைத்
தேன் நிலாவிய சிற்றம் பலவனார்
வான் நிலாவி இருக்கவும் வைப்பரே. 5

சிட்டர் வானவர் சென்று வரம் கொளும்
சிட்ட்டர் வாழ் தில்லைச் சிறம்பலத்து உறை
சிட்டன் சேவடி கைத்தொழச் செல்லும் அச்
சிட்டர்பால் அணுகான் செறு காலனே. 6

ஒருத்தனார் உலகங்கட்கு ஒரு சுடர்
திருத்தனார் தில்லைச் சிற்றம்பலவனார்
விருத்தனார் இளையார் விடம் உண்டஎம்
அருத்தனார் அடியாரை அறிவாரே. 7

விண் நிறைந்தது ஓர் வெவ்வழலின் உரு
எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஓணாக்
கண் நிறைந்த கடிபொழில் அம்பலத்து
உள் நிறைந்து நின்று ஆடும் ஒருவனே. 8

வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்தம்
வல்லை வட்டம் மதில்மூன்று உடன்மாய்த்தவன்
தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை
ஒல்லை வட்டம் கடந்து ஓடுதல் உண்மையே. 9

நாடி நாரணன் நான்முகன் என்று இவர்
தேடியும் திரிந்தும் காண வல்லரோ
மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து
ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே. 10

மதுர வாய்மொழி மங்கை ஓர் பங்கினன்
சதுரன் சிற்றம்பலவன் திருமலை
அதிர ஆர்த்து எடுத்தான் முடிபத்து இற
மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்மினே. 11




திருநாவுக்கரசு சுவாமிகள் - தேவாரம் - தலமுறை - ( 006)

திருச்சிற்றம்பலம் 6. திருத்தில்லை திருமுறை : 4 ( 81 - வது பதிகம்) /  பண் : கொல்லி /  திருவிருத்தம் கருநட்ட கண்டனை அண்டத்தலைவனைக் கற்பகத்த...