திங்கள், 26 ஏப்ரல், 2010

திருநாவுக்கரசு சுவாமிகள் - தேவாரம் - தலமுறை ( 003)

3. திருத்தில்லை

திருமுறை : 4 / ( 22-வது பதிகம்)

பண் : கொல்லி
இராகம் : திரு நேரிசை




சென்சடைக்கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் சென்னி
நஞ்சு அடை கண்டனாரைக் காணல் ஆம் நறவம் நாறும்
மஞ்சு அடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே
துஞ்சு அடை இருள் கிழியத் துளங்கு எரிஆடுமாறே. (01)
ஏறனார் ஏறு தம்பால் இளநிலா எறிக்கும் சென்னி
ஆறனார் ஆறுசூடி ஆயிழையாள் ஓர்பாகம்
நாறு பூஞ்சோலைத் தில்லை நவின்ற சிற்றம்பலத்தே
நீறு மெய்பூசி நின்று நீண்டு எரி ஆடுமாறே. (02)
சடையனார் சாந்தநீற்றர் தனி நிலா எறிக்கும் சென்னி
உடையனார் உடைத்தலையில் உண்பதும் பிச்சை ஏற்றுக்
கடி கொள் பூந் தில்லைதன்னுள் கருது சிற்றம்பலத்தே
அடி கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடுமாறே. (03)

பைஅரவு அசைத்த அல்குல் பனிநிலா எறிக்கும் சென்னி
மையரிக்கண்ணியாளும் மாலும் ஓர் பாகம் ஆகிச்
செய்எரித் தில்லைதன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
கைஎரி வீசி நின்று கனல் எரி ஆடுமாறே. (04)

ஓதினார் வேதம் வாயால் ஒளி நிலா எறிக்கும் சென்னி
பூதனார் பூதம் சூழப் புலிஉரி அதளனார் தாம்
நாதனார் தில்லைதன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே
காதில் வெண்குழைகள் தாழக் கனல் எரி ஆடுமாறே. (05)

ஓர் உடம்பு இருவர் ஆகி ஒளிநிலா எறிக்கும் சென்னிப்
பாரிடம் பணிசெய்யப் பயின்ற எம் பரமமூர்த்தி
கார் இடம் தில்லைத் தன்னுள் கருது சிறம்பலத்தே
பேர் இடம் பெருக பிறங்கு எரி ஆடுமாறே. (06)

முதல் தனிச் சடையை மூழ்க முகில்நிலா எறிக்கும்சென்னி
மதக்களிற்று உரிவை போர்த்த மைந்தரைக் காணல் ஆகும்
மதத்து வண்டு அறையும் சோலை மல்கு சிற்றம்பலத்தே
கதத்தது ஓர் அரவம் ஆடக்கனல் எரி ஆடுமாறே. (07)

மறையனார் மழுஒன்று ஏத்தி மணிநிலா எறிக்கும் சென்னி
இறைவனார் எம்பிரானார் ஏத்துவார் இடர்கள்தீர்ப்பார்
சிறைகொள் நீர்த்தில்லை தன்னுள் திகழ்ந்த சிறம்ம்பலத்தே
அறைகழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடுமாறே. (08)

விருத்தனாய்ப் பாலனாகி விரிநிலா எறிக்கும் சென்னி
நிருத்தனார் நிருத்தம் செய்ய நீண்ட புன்சடைகள் தாழக்
கருத்தனார் தில்லைதன்னுள் கருது சிற்றம்பலத்தே
அருத்தமாமேனித் தன்னோடு அனல் எரி ஆடுமாறே. (09)

பாலனாய் விருத்தனாகி பனி நிலா எறிக்கும் சென்னிக்
காலனைக் காலால் காய்ந்த கடவுளார் விடை ஒன்று ஏறி
ஞாலம் ஆம் தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே
நீலம் சேர் கண்டனார் தாம் நீண்டு எரி ஆடுமாறே. (10)

மதி இலா அரக்கன் ஓடி மாமலை எடுக்க நோக்கி
நெதியன் தோள் நெறிய ஊன்றி நீடு இரும் பொழில்கள் சூழ்ந்த
மதியம் தோய் தில்லை தன்னுள் மல்கு சிற்றம்பலத்தே
அதிசயன் போல நின்று அனல் எரி ஆடுமாறே. (11)












































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருநாவுக்கரசு சுவாமிகள் - தேவாரம் - தலமுறை - ( 006)

திருச்சிற்றம்பலம் 6. திருத்தில்லை திருமுறை : 4 ( 81 - வது பதிகம்) /  பண் : கொல்லி /  திருவிருத்தம் கருநட்ட கண்டனை அண்டத்தலைவனைக் கற்பகத்த...