சனி, 5 ஜூன், 2010

திருநாவுக்கரசு சுவாமிகள் - தேவாரம் - தலமுறை - ( 006)


திருச்சிற்றம்பலம்
6. திருத்தில்லை

திருமுறை : 4 (81-வது பதிகம்) /  பண் : கொல்லி / திருவிருத்தம்

கருநட்ட கண்டனை அண்டத்தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதில் எய்ய வல்லானைச் செந்தீ முழங்கத்
திரு நட்டம் ஆடியைத் தில்லைக்கு இறையைச் சிற்றம்பலத்துப்
பெருநட்டம் ஆடியை வானவர்கோன் என்று வாழ்த்துவ்னே. (01)

ஒன்றி இருந்து நினைமின்கள் உம்தமக்கு ஊனம் இல்லைக் 
கன்றியக் காலனைக் காலால் கடிந்தான் அடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என்று வந்தாய் என்னும் எம்பெருமாந்தன் திருக்குறிப்பே. (02)

கல்மனவீர் கழியும் கருத்தே சொல்லிக் காண்பது என்னே
நல்மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
பொன்மலையில் வெள்ளிக்குன்றது போலப் பொலிந்து இலங்கி
என் மனமே ஒன்றிப் புக்கனன் போந்த சுவடு இல்லையே. (03) 

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமின் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்நீறும்
இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மா நிலத்தே. (04)

வாய்த்தது நம்தமக்கு ஈது ஓர் பிறவி மதித்திடுமின் 
பார்த்தற்குப் பாசுபதம் அருள் செய்தவன் பத்தர் உள்ளீர்
கோத்து அன்று முப்புரம் தீ வளைத்தான் தில்லை அம்பலத்துக்
கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நம்தம் கூழைமையே. (05)

பூத்தன பொன்சடை பொன்போல் மிளிரப் புரிகணங்கள் 
ஆர்த்தன கொட்டி அரித்தன பல்குறள் பூதக்கணம்
தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்துக்
கூத்தனில் கூத்து வல்லார் உளரோ எந்தன் கோல்வளைக்கே. (06)

முடி கொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்கும் முறுவலிப்பும்
துடி கொண்ட கையும் துதைந்த வெண்நீறும் சுரிகுழலாள் 
படி கொண்ட பாகமும் பாய் புலித்தோலும் என் பாவிநெஞ்சில்
குடி கொண்டவா தில்லை அம்பலக் கூத்தன் குரைகழலே. (07)

படைக்கலமாக உன் நாமத்து எழுத்து அஞ்சும் என் நாவில் கொண்டேன்
இடைக்கல்ம் அல்லேன் எழுபிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன்
துடைக்கினும் போகேன் தொழுது வணங்கித் தூநீறு அணிந்து உன் 
அடைக்கலம் கண்டேய் அணிதில்லைச் சிற்றம்பலத்து அரனே. (08)

பொன் ஒத்த மேனை மேல் வெண்நீறு அணிந்து புரிசடைகள்
மின் ஒத்து இலங்கப் பலி தேர்ந்து உழலும் விடங்கர்வேடச்
சின்னத்தினால் மலி தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என் அத்தன் ஆடல் கண்டு இன்பு உற்றதால் இவ்விரு நிலமே. (09)

சாட எடுத்தது தக்கன் தன் வேள்வியில் சந்திரனை 
வீடஎடுத்தது காலனை நாரணன் நான்முகனும்
தேட எடுத்தது தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் 
ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ நம்மை ஆட்கொண்டதே. (10)

திருச்சிற்றம்பலம் 

திருநாவுக்கரசு சுவாமிகள் - தேவாரம் - தலமுறை - ( 006)

திருச்சிற்றம்பலம் 6. திருத்தில்லை திருமுறை : 4 ( 81 - வது பதிகம்) /  பண் : கொல்லி /  திருவிருத்தம் கருநட்ட கண்டனை அண்டத்தலைவனைக் கற்பகத்த...