திங்கள், 26 ஏப்ரல், 2010

திருநாவுக்கரசு சுவாமிகள் - தேவாரம் - தலமுறை ( 003)

3. திருத்தில்லை

திருமுறை : 4 / ( 22-வது பதிகம்)

பண் : கொல்லி
இராகம் : திரு நேரிசை




சென்சடைக்கற்றை முற்றத்து இளநிலா எறிக்கும் சென்னி
நஞ்சு அடை கண்டனாரைக் காணல் ஆம் நறவம் நாறும்
மஞ்சு அடை சோலைத் தில்லை மல்கு சிற்றம்பலத்தே
துஞ்சு அடை இருள் கிழியத் துளங்கு எரிஆடுமாறே. (01)
ஏறனார் ஏறு தம்பால் இளநிலா எறிக்கும் சென்னி
ஆறனார் ஆறுசூடி ஆயிழையாள் ஓர்பாகம்
நாறு பூஞ்சோலைத் தில்லை நவின்ற சிற்றம்பலத்தே
நீறு மெய்பூசி நின்று நீண்டு எரி ஆடுமாறே. (02)
சடையனார் சாந்தநீற்றர் தனி நிலா எறிக்கும் சென்னி
உடையனார் உடைத்தலையில் உண்பதும் பிச்சை ஏற்றுக்
கடி கொள் பூந் தில்லைதன்னுள் கருது சிற்றம்பலத்தே
அடி கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடுமாறே. (03)

பைஅரவு அசைத்த அல்குல் பனிநிலா எறிக்கும் சென்னி
மையரிக்கண்ணியாளும் மாலும் ஓர் பாகம் ஆகிச்
செய்எரித் தில்லைதன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே
கைஎரி வீசி நின்று கனல் எரி ஆடுமாறே. (04)

ஓதினார் வேதம் வாயால் ஒளி நிலா எறிக்கும் சென்னி
பூதனார் பூதம் சூழப் புலிஉரி அதளனார் தாம்
நாதனார் தில்லைதன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே
காதில் வெண்குழைகள் தாழக் கனல் எரி ஆடுமாறே. (05)

ஓர் உடம்பு இருவர் ஆகி ஒளிநிலா எறிக்கும் சென்னிப்
பாரிடம் பணிசெய்யப் பயின்ற எம் பரமமூர்த்தி
கார் இடம் தில்லைத் தன்னுள் கருது சிறம்பலத்தே
பேர் இடம் பெருக பிறங்கு எரி ஆடுமாறே. (06)

முதல் தனிச் சடையை மூழ்க முகில்நிலா எறிக்கும்சென்னி
மதக்களிற்று உரிவை போர்த்த மைந்தரைக் காணல் ஆகும்
மதத்து வண்டு அறையும் சோலை மல்கு சிற்றம்பலத்தே
கதத்தது ஓர் அரவம் ஆடக்கனல் எரி ஆடுமாறே. (07)

மறையனார் மழுஒன்று ஏத்தி மணிநிலா எறிக்கும் சென்னி
இறைவனார் எம்பிரானார் ஏத்துவார் இடர்கள்தீர்ப்பார்
சிறைகொள் நீர்த்தில்லை தன்னுள் திகழ்ந்த சிறம்ம்பலத்தே
அறைகழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடுமாறே. (08)

விருத்தனாய்ப் பாலனாகி விரிநிலா எறிக்கும் சென்னி
நிருத்தனார் நிருத்தம் செய்ய நீண்ட புன்சடைகள் தாழக்
கருத்தனார் தில்லைதன்னுள் கருது சிற்றம்பலத்தே
அருத்தமாமேனித் தன்னோடு அனல் எரி ஆடுமாறே. (09)

பாலனாய் விருத்தனாகி பனி நிலா எறிக்கும் சென்னிக்
காலனைக் காலால் காய்ந்த கடவுளார் விடை ஒன்று ஏறி
ஞாலம் ஆம் தில்லை தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே
நீலம் சேர் கண்டனார் தாம் நீண்டு எரி ஆடுமாறே. (10)

மதி இலா அரக்கன் ஓடி மாமலை எடுக்க நோக்கி
நெதியன் தோள் நெறிய ஊன்றி நீடு இரும் பொழில்கள் சூழ்ந்த
மதியம் தோய் தில்லை தன்னுள் மல்கு சிற்றம்பலத்தே
அதிசயன் போல நின்று அனல் எரி ஆடுமாறே. (11)












































திங்கள், 19 ஏப்ரல், 2010

திருநாவுக்கரசர் சுவாமிகள் -தேவாரம் - தலமுறை (001)


1. திருத்தில்லை

திருமுறை : 5 / ( 1-வது பதிகம்)

திருக்குறுந்தொகை
பண் : குறிஞ்சி

இறைவன்: சபாநாயகர், / திருமூலநாதர்
இறைவி : சிவகாமியம்மை, / உமையம்மை

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என்னன்பு ஆலிக்குமாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே. 1

அரும்பு அற்றப்பட ஆய்மலர் கொண்டுநீர்
கரும்பு அற்றப் படத்தூவித் தொழுமினோ
கரும்பு அற்றச் சிலைக் காமைக் காய்ந்தவன்
பெரும்பற்றப் புலியூர் எம் பிரானையே. 2

அரிச்சுற்ற வினையால் அடர்ப்புண்டு நீர்
எரிச்சுற்றக் கிடந்தார் என்றயலவர்
சிரிச்சுற்றுப் பலபேசப் படாமுன்னம்
திருச்சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்மினே. 3
அல்லல் என்செய்யும் அருவினை என்செய்யும்
தொல்லை வல்வினைத் தொந்தம்தான் என்செய்யும்
தில்லைமா நகர்ச் சிற்றம்பல வனர்க்கு
எல்லை இல்லது ஓரடிமை பூண்டேனுக்கே. 4

ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்
நான் நிலாவி இருப்பன் என்நாதனைத்
தேன் நிலாவிய சிற்றம் பலவனார்
வான் நிலாவி இருக்கவும் வைப்பரே. 5

சிட்டர் வானவர் சென்று வரம் கொளும்
சிட்ட்டர் வாழ் தில்லைச் சிறம்பலத்து உறை
சிட்டன் சேவடி கைத்தொழச் செல்லும் அச்
சிட்டர்பால் அணுகான் செறு காலனே. 6

ஒருத்தனார் உலகங்கட்கு ஒரு சுடர்
திருத்தனார் தில்லைச் சிற்றம்பலவனார்
விருத்தனார் இளையார் விடம் உண்டஎம்
அருத்தனார் அடியாரை அறிவாரே. 7

விண் நிறைந்தது ஓர் வெவ்வழலின் உரு
எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஓணாக்
கண் நிறைந்த கடிபொழில் அம்பலத்து
உள் நிறைந்து நின்று ஆடும் ஒருவனே. 8

வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்தம்
வல்லை வட்டம் மதில்மூன்று உடன்மாய்த்தவன்
தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை
ஒல்லை வட்டம் கடந்து ஓடுதல் உண்மையே. 9

நாடி நாரணன் நான்முகன் என்று இவர்
தேடியும் திரிந்தும் காண வல்லரோ
மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து
ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே. 10

மதுர வாய்மொழி மங்கை ஓர் பங்கினன்
சதுரன் சிற்றம்பலவன் திருமலை
அதிர ஆர்த்து எடுத்தான் முடிபத்து இற
மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்மினே. 11




திருநாவுக்கரசு சுவாமிகள் - தேவாரம் - தலமுறை - ( 006)

திருச்சிற்றம்பலம் 6. திருத்தில்லை திருமுறை : 4 ( 81 - வது பதிகம்) /  பண் : கொல்லி /  திருவிருத்தம் கருநட்ட கண்டனை அண்டத்தலைவனைக் கற்பகத்த...