ஞாயிறு, 2 மே, 2010

திருநாவுக்கரசர் சுவாமிகள் தேவாரம் -தலமுறை - (002)


திருத்தில்லை

திருமுறை : 5 / (2-வது பதிகம்)
பண் : குறிஞ்சி
திருக்குறுந்தொகை

01 பனைக்கை மும்மத வேழம் உரித்தவன்
நினைப்பவர் மனம் கோயிலாக் கொண்டவன்
அனைத்தும் வேடமாம் அம்பலக் கூத்தனைத்
தினைதனைப் பொழுதும் மறந்து உய்வனோ.

02 தீர்த்தனைச் சிவனைச் சிவலோகனை
மூர்த்தியை முதலாய ஒருவனைப்
பார்த்தனுக்கு அருள்செய்த சிற்றம்பலக்
கூத்தனைக் கொடியேன் மறந்து உய்வனோ.

03 கட்டும் பாம்பும் கபாலம் கை மான் மறி
இட்டமாய் இடுகாட்டு எரி ஆடுவான்
சிட்டர் வாழ் தில்லை அம்பலக் கூத்தனை
எள்தனைப் பொழுதும் மறந்து உய்வனோ.

04 மாணி பால் கறந்து ஆட்டி வழிபட
நீண் உலகுஎலம் ஆளக் கொடுத்த என்
ஆணியைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற
தாணுவைத் தமியேன் மறந்து உய்வனோ.

05 பித்தனைப் பெருங்காடு அரங்கா உடை
முத்தனை முளை வெண்மதி சூடியைச்
சிந்தனைச் செம்பொன் அம்பலத்துள் நின்ற
அத்தனை அடியேன் மறந்து உய்வனோ.

06 நீதியை நிறைவை மறைநான்கு உடன்
ஓதியை ஒருவர்க்கும் அறிவு ஒணாச்
சோதியைச் சுடர் செம்பொனின் அம்பலத்து
ஆதியை அடியேன் மறந்து உய்வனோ.

07 மைகொள் கண்டன் எண்தோளன் முக்கண்ணினன்
பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனார்
செய்யமாது உறை சிற்றம்பலத்து எங்கள்
ஐயனை அடியேன் மறந்து உய்வனோ.

08 முழுதும் வான்உலகத்து உள தேவர்கள்
தொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால்
எழுதி மேய்ந்த சிற்றம்பலக் கூத்தனை
இழுதையேன் மறந்து எங்கனம் உய்வனோ.

09 கார் உலாம் மலர்க்கொன்றை அம்தாரனை
வார் உலாம் முலை மங்கை மணாளனைத்
தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை
ஆர்கிலா அமுதை மறந்து உய்வனோ.

10 ஓங்கு மால்வரை எந்தல் உற்றான் சிரம்
வீங்கி விம்முற ஊன்றிய தாளினான்
தேங்கு நீர் வயல் சூழ் தில்லைக் கூத்தனைப்
பங்கு இலாத் தொண்டனேன் மறந்து உய்வனோ.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திருநாவுக்கரசு சுவாமிகள் - தேவாரம் - தலமுறை - ( 006)

திருச்சிற்றம்பலம் 6. திருத்தில்லை திருமுறை : 4 ( 81 - வது பதிகம்) /  பண் : கொல்லி /  திருவிருத்தம் கருநட்ட கண்டனை அண்டத்தலைவனைக் கற்பகத்த...